நாடு முழுவதும் வருகின்ற ஜூன் 29ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. வார இறுதியில் வருவதால் இதற்காக மாநிலம் முழுவதும் இருந்து பொதுமக்கள் தங்களின் சொந்த ஊருக்கு சென்று திரும்புவார்கள். இதனால் பயணிகள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்கு சென்று திரும்ப ஏதுவாக புதன்கிழமை சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு தினசரி இயங்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 400 பேருந்துகளும், கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் சேலம் போன்ற இடங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. மேலும் பெங்களூரில் இருந்து பிற இடங்களுக்கு 400 பேருந்துகள் என மொத்தம் 800 சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.