சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் பால் பண்ணை மஞ்சம்பாக்கம் கொசப்பூர் 200 அடி சாலையின் இருபுறங்களிலும் சுத்தம் செய்யும் பணியில் வாகனம் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. இந்நிலையில் வாகனத்தில் என்ஜின் பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது. சிறிது நேரத்தில் வாகனம் முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு வாகனத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் வாகனம் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.