கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுந்தரபுரம் காவல் நிலையத்தில் பத்திரகாளி என்பவர் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் பத்ரகாளி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது இரண்டு பேர் காருக்குள் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர். இதுகுறித்து கேட்டபோது இருவரும் போலீஸ்காரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பத்ரகாளி தனது செல்போனில் அவர்களை வீடியோ எடுக்க முயற்சி செய்தபோது இருவரும் போலீஸ்காரரை தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தனியார் நிறுவன ஊழியர் சிவசங்கரன், ஐ.டி ஊழியர் ஸ்ரீ விக்னேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.