கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுந்தரபுரம் காவல் நிலையத்தில் பத்திரகாளி என்பவர் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் பத்ரகாளி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது இரண்டு பேர் காருக்குள் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர். இதுகுறித்து கேட்டபோது இருவரும் போலீஸ்காரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பத்ரகாளி தனது செல்போனில் அவர்களை வீடியோ எடுக்க முயற்சி செய்தபோது இருவரும் போலீஸ்காரரை தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தனியார் நிறுவன ஊழியர் சிவசங்கரன், ஐ.டி ஊழியர் ஸ்ரீ விக்னேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ்காரர் மீது தாக்குதல்…. ஐ.டி ஊழியர் உள்பட இருவர் கைது…. அதிரடி நடவடிக்கை…!!
Related Posts
தமிழகத்தில் கோர விபத்து… ஏற்காட்டில் பேருந்து கவிழ்ந்து 4 பேர் பலி…!!!!
ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி இன்று ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது மலைப்பாதையில் உள்ள 11 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் பேருந்து திரும்பிய போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சுற்றுப்பாதை பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.…
Read moreமனைவியின் கள்ளக்காதலனை கொடூரமாகக் வெட்டிக் கொன்ற போலீஸ் ஏட்டு…. விருதுநகரில் பரபரப்பு…!!
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையம் பகுதியில் மைனர் என்பவர் வசித்து வருகிறார். இவர் போலீஸ் ஏட்டாக சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இவர் வேலை நிமித்தமாக சென்னையில் இருக்கும் நிலையில் இவருடைய மனைவி மாலதி தன்னுடைய குழந்தைகளுடன் சொந்த ஊரில் இருந்துள்ளார். இந்நிலையில் அதே…
Read more