திருப்பூர் மாவட்டம் பல்லடம் கள்ள கிணறு கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் மர்ம கும்ப கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோகன்ராஜ், ரத்தினாம்பாள் மற்றும் புஷ்பவதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த செந்தில்குமார் என்பவரும் உயிரிழந்த நிலையில் வீட்டின் அருகே மது அருந்திய வரை தட்டி கேட்டதால் கொலை நடந்ததா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். உடல்களை எடுக்க விடாமல் ஊர் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.