கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் அருகே சமயபுரம் பகுதியில் காட்டு யானை அடிக்கடி உலா வருகிறது. நேற்று காலை கல்லாறு வனப்பகுதியில் இருந்து பாகுபலி யானை வெளியேறி சமயபுரம் குடியிருப்பு பகுதியில் உலா வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். கடந்த சில நாட்களாக பாகுபலி யானையின் நடமாட்டம் இல்லாமல் இருந்ததால் பொதுமக்கள் நிம்மதியாக இருந்தனர். தற்போது யானையும் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.