கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வாட மங்கலத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு சமூக அறிவியல் ஆசிரியராக சத்திய சுந்தரம் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். அவரை குருபரப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்துள்ளனர்.

இந்நிலையில் ஆசிரியரின் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் பள்ளி வளாகத்தின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் மாது, போச்சம்பள்ளி தாசில்தார் அனிதா ஆகியோர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சத்தியசுந்தரத்தை மீண்டும் அதே பள்ளியில் பணி அமர்த்த நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதன் பிறகு மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புக்கு சென்றனர்.