கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுந்தரபுரம் காவல் நிலையத்தில் பத்திரகாளி என்பவர் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் பத்ரகாளி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது இரண்டு பேர் காருக்குள் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர். இதுகுறித்து கேட்டபோது இருவரும் போலீஸ்காரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பத்ரகாளி தனது செல்போனில் அவர்களை வீடியோ எடுக்க முயற்சி செய்தபோது இருவரும் போலீஸ்காரரை தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தனியார் நிறுவன ஊழியர் சிவசங்கரன், ஐ.டி ஊழியர் ஸ்ரீ விக்னேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ்காரர் மீது தாக்குதல்…. ஐ.டி ஊழியர் உள்பட இருவர் கைது…. அதிரடி நடவடிக்கை…!!
Related Posts
பீரோவில் இருந்த மொத்தத்தையும் சுருட்டிட்டு, போகும்போது திருடன் செய்த செயல்… பரபரப்பு சம்பவம்…!!!
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சாலை உலியம்பாளையம் என்ற பகுதியில் ஞானசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது உறவினர் வீட்டுக்கு சென்று இருந்த நிலையில் அவருடைய வீட்டுக்குள் நேற்று இரவு புகுந்த திருடன் அவரது படுக்கை அறையில் இருந்த பீரோவில்…
Read moreகூலிப்படையை ஏவி மாமியார் கொலை…. மருமகளுக்கு சிறை…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆதிலட்சுமி. 60 வயதான இவர் ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார். இவர் கடந்த 2017 ஆம் வருடம் தன்னுடைய மருமகள் சத்யாவால் கூலிப்படைய ஏவி கொலை செய்யப்பட்டார். இது குறித்து நடந்த விசாரணையில் மாமியாருடன் ஏற்பட்ட தகராறு…
Read more