தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்த இமயம் பாரதிராஜா இன்று மரணம் அடைந்தார். அவருடைய மகன் மனோஜ் இறந்ததிலிருந்து கடும் வேதனைக்கு உள்ளாகி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பாரதிராஜா அந்த வேதனையிலேயே மூழ்கியதால் அவரது உயிர் பிரிந்தது. இவரது மறைவுக்கு தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் கங்கை அமரனும் ராதிகாவும் அங்கு முன்கூட்டியே சென்ற நிலையில் அவர்கள் பாரதிராஜா உடலருகே கண்கலங்கியபடி நிற்கிறார்கள்.
மறைந்த தனது கணவர் பாரதிராஜா உடலை பார்த்ததும் கதறி துடித்த அவரது மனைவி..! ஆறுதல் கூற முடியாமல் கண்கலங்கி நின்ற உறவினர்கள்..#Neelankarai | #CMVijay | #DirectorBharathiRaja | #RIP | #PolimerNews pic.twitter.com/uFS4OkZ9sh
— Polimer News (@polimernews) June 10, 2026
இந்த நிலையில் பாரதிராஜாவின் மனைவி சந்திரலீலா அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்தார். அவர் கணவனின் உடலை பார்த்ததும் கதறி துடித்த நிலையில் அங்கிருந்த கங்கை அமரன் கோபத்தில் திட்ட ஆரம்பித்துவிட்டார். கடைசி நேரத்தில் அவரை தனியாக விட்டுவிட்டு அனைவரும் சென்று விட்டீர்களே இப்படி ஆனதையாக போக விட்டுவிட்டீர்களே என்று கோபத்தில் அவர் கத்த ராதிகா மற்றும் அங்கிருந்தவர்கள் அவரை சமாதானப்படுத்தினார். மேலும் இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
Bharathiraja Wife | பாரதிராஜா உடலை கண்டு கதறிய அழுத மனைவி கோபத்தில் கொதித்த கங்கை அமரன்..! https://t.co/Ky6G2HFGaX #gangaiamaran #bharathiraja #bharathirajawife
— Thanthi TV (@ThanthiTV) June 10, 2026
