ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தீரஜ்குமார் என்பவர் தெற்கு ரயில்வேயில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை குமார் வேலை நிமித்தமாக சென்ட்ரலில் இருந்து மின்சார ரயிலில் அண்ணனூர் சென்று கொண்டிருந்தார். அவர் வாசல் அருகே நின்று கொண்டிருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் வந்தபோது குமார் திடீரென ஓடும் ரயிலில் இருந்து கீழே இறங்க முயற்சி செய்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்த குமார் நடைமேடைக்கும் மின்சார ரயில் பெட்டிக்கும் இடையே சிக்கிக்கொண்டார். இதனால் ஒரு கை, கால் துண்டாகி அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குமாரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குமார் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.