சென்னை மாவட்டத்தில் உள்ள அனகாபுத்தூர் காமராஜ்புரம் விநாயகபுரம் பகுதியில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரிதா(38) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு நகுல்(12) என்ற மகன் உள்ளார். இதில் சரிதா நாகல்கேணியில் இருக்கும் தோல் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர்களது வீட்டிற்கு அருகே செல்வகுமார், பாலாஜி என்ற இரண்டு வாலிபர்கள் குடி இருக்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருக்கும் இவர்கள் பொதுவான கழிவறையை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் செல்வகுமாரும் பாலாஜியும் பொது கழிவறையை அசத்தப்படுத்தியதாக தெரிகிறது.

அதனை சுத்தம் செய்வது தொடர்பாக கோபாலகிருஷ்ணனுக்கும், அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் சரிதா தனது கணவரை தடுப்பதற்காக வீட்டிலிருந்து வேகமாக வெளியே ஓடி வந்தார். அப்போது படிக்கட்டு அருகே நிலைதடுமாறு கீழே விழுந்து சரிதாவின் தலையில் படுகாயம் ஏற்பட்டது. அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சரிதாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.