நிலவின் தென் துருவத்தில் இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 3 விண்கலம் தரை இறங்கி இந்திய மக்கள் அனைவரையும் கௌரவப்பட செய்தது. இந்த சாதனைக்கு பிறகு முன்னணி நாடுகள் பல இஸ்ரோவுடன் இணைந்து பணியாற்ற முன் வந்தன.

இந்நிலையில் ஐஸ்லாந்தின் ஹூசாவிக் நகர ஆய்வு அருங்காட்சியகம் சந்திராயன் 3 விண்கலத்தின் வெற்றிக்காக இஸ்ரோவுக்கு விருது வழங்கி கௌரவித்துள்ளது. 2023 ஆம் வருடத்திற்கான லீப் எரிக்ஷன் லூனார் என்ற உயரிய விருது இஸ்ரோவுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை ஐஸ்லாந்துக்கான இந்திய தூதர் ஷியாம் இஸ்ரோ சார்பில் பெற்றுக் கொண்டார்.