இரண்டு வருடங்களாக உக்ரைன் ரஷ்யா இடையே போர் நடந்து வருகிறது. ரஷ்ய படைகள் உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டு வருகின்றது. அதனை எதிர்த்து உக்ரைனும் பதில் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் உக்ரைனின் தலைநகரான கீவ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மீது ரஷ்யா ட்ரோன் மூலமாக தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் குடியிருப்பு தளத்தின் மேல் தளம் பற்றி எரிந்ததில் இரண்டு பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து மீட்பு படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.