செக் குடியரசின் தலைநகர் ப்ராக் நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜான் பலாச் சதுக்கத்தில் உள்ள சார்லஸ் பல்கலைக் கழகத்தில் மாணவர் ஒருவர் திடீரென துப்பாக்கிசூடு நடத்தியுள்ளார். இந்நிலையில் இந்த துப்பாக்கிச்சூட்டில் 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 20 பேர் காயமடைந்துள்ளனர்.

தகவலறிந்து போலீசார் வந்து பார்த்தபொழுது துப்பாக்கிசூடு நடத்திய நபரும் உயிரிழந்து கிடந்ததாக போலீசார் கூறியுள்ளனர். இந்நிலையில் 9 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.