ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் தேதி இந்திய குடியரசு தின விழா வெகு விமர்சையாக நடைபெறும். அதேபோன்று உலக நாடுகளின் தலைவர்களுக்கு விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்க அழைப்பு விடுக்கப்படும்.

அவ்வகையில் இம்முறை குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரானுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அதற்கு அதிபர் மெக்ரான் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.