கடந்த சில தினங்களாக இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று புதிதாக 640 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2997 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே கேரளாவில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 265 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பல இடங்களில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொது இடங்களுக்கு வரும்போது முக கவசம் அணிவது கட்டாயம் என சண்டிகர் அரசு அறிவுறுத்தியுள்ளது.