விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச் சாராயம் விற்று 3 பேர் உயிரிழப்புக்கு காரணமான அமரன் கைது செய்யப்பட்டு இருக்கிறார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று கள்ளச்சாராயம் குடித்த 11 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இருவர் நேற்றே உயிரிழந்த நிலையில் இன்று காலை ஒருவர் மரணமடைந்திருக்கிறார். மீதம் 8 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜிப்மர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறார்