நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த ஜேடர்பாளையத்தில் 4 பேர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கிருக்கும், ஆலை கொட்டகையில், தொழிலாளர்கள் தங்கியிருந்த அறையில், தூங்கிக் கொண்டிருந்த 4 பேர் மீது மர்மநபர்கள் சிலர் பெட்ரோ ஊற்றி தீ வைத்துள்ளனர். இதனால், பலத்த தீ காயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.