வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள் வெறும் விலங்குகள் மட்டுமல்ல, அவை ஒரு குடும்பத்தின் அங்கமாகவே மாறி மனிதர்களின் அன்பையும் பாசத்தையும் பெறுகின்றன. ஆனால், உயிருடன் இருக்கும் வரை கொஞ்சி மகிழும் அதே பிராணிகள் இறந்துபோகும்போது, அவற்றின் சடலங்களைச் சிலர் நடத்தும் விதம் மனசாட்சியுள்ள அனைவரையும் பதற வைக்கிறது.

அந்த வகையில், இறந்துபோன ஒரு வளர்ப்பு நாயின் சடலத்தை நதியில் மிகச் சதாரணமாகத் தூக்கி வீசும் அதிர்ச்சி வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி, சமூக வலைதளங்களில் மிகப்பெரிய காரசார விவாதத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒருவர் தான் ஆசையாக வளர்த்த நாயின் உடலை ஒரு பையிலோ அல்லது துணியிலோ சுற்றி, ஓடும் ஆற்றில் தூக்கி எறிகிறார். இந்த மனதை உறைய வைக்கும் காட்சி இணையவாசிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் “ஆயுள் முழுவதும் நமக்கு உண்மையாகவும் நன்றியோடும் இருந்த ஒரு ஜீவனுக்குக் கடைசியில் நாம் கொடுக்கும் மரியாதை இதுதானா?” என்று விலங்கு நல ஆர்வலர்களும் பொதுமக்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், “இப்படி ஆற்றில் எறிவதற்குப் பதிலாக, அதை மண்ணில் புதைத்து கண்ணியமான முறையில் இறுதி அஞ்சலி செலுத்தியிருக்கலாமே” எனப் பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் வெறும் விலங்கு நலச் சார்ந்த கோபத்தை மட்டும் தூண்டாமல், சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதாரப் பிரச்சனைகள் குறித்த விவாதத்தையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. இறந்துபோன விலங்கினங்களின் சடலங்களை ஓடும் நீரிலோ அல்லது பொது நீர்நிலைகளிலோ வீசுவது, அந்த நீரைப் பயன்படுத்தும் மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் கடுமையான நோய்த்தொற்றுகளைப் பரப்பும் அபாயத்தைக் கொண்டுள்ளது.

எனவே, செல்லப் பிராணிகள் இறக்கும் பட்சத்தில் அவற்றைச் சரியான முறையில் நிலத்தில் அடக்கம் செய்ய வேண்டும் அல்லது நகர்ப்புறங்களில் உள்ள மயான வசதிகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை அதிகாரிகள் ஏற்படுத்த வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

“>