தமிழக கலை பண்பாட்டு துறையின் சார்பாக கலைத்துறையில் சிறந்த விளங்கும் நபர்களை சிறப்பிக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் விருது வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தியில், இயல் இசை நாடகம் உள்ளிட்ட கலைகளில் சிறந்து விளங்கும் 15 கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது.

18 வயதிற்கு உட்பட்ட கலைஞர்களுக்கு கலை இளம் மணி விருதும், 19 புதன் 35 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு கலை வளர்மதி விருதும், 36 முதல் 50 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு கலை சுடர்மனி விருதும், 50 முதல் 60 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு கலை நன்மணி விருதும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முதுமணி விரதம் வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதி உள்ள நபர்கள் கலைத்துறை சார்ந்த அனுபவச் சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம். தங்கள் விண்ணப்பங்களை 20 நாட்களுக்குள் உதவி இயக்குனர் மண்டல கலை பண்பாட்டு மையம், அரசு அலுவலர் குடியிருப்பு மற்றும் திருநெல்வேலி 7 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.