திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காசம்பட்டியில் சிங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொதியழகி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு பொதியழகிக்கு சூடாமணி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் பொதியழகி கோபத்தில் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பொதியழகி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதியழகியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.