கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூரில் 25 வயது இளம்பெண் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று இளம்பெண் தனது குழந்தையுடன் வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்கு அருகில் வசிக்கும் காவலாளி சுரேஷ் குமார் என்பவர் குழந்தைக்கு சாக்லேட் கொடுப்பது போல அருகே சென்றார்.

இதனையடுத்து சுரேஷ்குமார் இளம் பெண்ணை கட்டிபிடித்து சில்மிஷத்தில் ஈடுபட முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் கத்தி கூச்சலிட்டதும் காவலாளி அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து இளம்பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து போலீசார் சுரேஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.