கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் சிருமங்கலம் கிராமத்தில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா என்ற வங்கியின் பின்புறம் பயன்பாடு இல்லாத செல்போன் கோபுரம் அமைந்துள்ளது. அந்த கோபுரத்தின் மீது மின்னல் தாக்கியது.

இதனால் வங்கியில் இருந்த ஐந்து கம்ப்யூட்டர்கள், கண்காணிப்பு கேமராக்கள், டிவி, மின்விசிறி ஆகியவை வெடித்து சேதமானதால் ஊழியர்கள் அச்சமடைந்தனர். இணையதளம் துண்டிக்கப்பட்டதால் வங்கி பணி பாதிக்கப்பட்டது. இதேபோல அந்த கிராமத்தில் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின்விசிறிகள், மின்விளக்குகள், குளிர்சாதன பெட்டிகள் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுதானது.