கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மன்றம் பாளையத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான நந்தகோபால் என்பவர் உடன் மொபட்டில் வடவள்ளி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார் அப்போது ராஜேஷ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மொபட் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இரண்டு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.