கடலூர் மாவட்டத்தில் உள்ள திருவதிகை சித்தர் கோவில் அருகே இருக்கும் மரத்தில் வாலிபன் தூக்கில் சடலமாக தூங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் தொரப்பாடியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பதும், முந்திரி விற்பனை நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்ததும் தெரியவந்தது. வருகிற 26-ஆம் தேதி மோகன்ராஜ்க்கு திருமணம் நடைபெற இருந்தது.

இந்நிலையில் நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்துவிட்டு வருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்ட மோகன்ராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. காதல் தோல்வி அல்லது திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லாமல் மோகன்ராஜ் தற்கொலை செய்து கொண்டார்? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.