கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லி தோப்பு கிராமத்தில் விவசாயியான அசோக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் சர்க்கரை நோயால் அவதிப்பட்ட அசோக் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் முந்திரி தோப்பிற்கு சென்று மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி விழுந்தார்.

அந்த வழியாக சென்றவர்கள் அசோக்கை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அசோக் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.