பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பேரழி கிராமத்தில் கருணாநிதி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பிரபாகரன் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு ரம்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று பிரபாகரன் மொபட்டில் பெரம்பலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் எறையூர் பிரிவு சாலையில் சென்றபோது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி மொபட் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பிரபாகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று பிரபாகரனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.