கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஜீமங்கலத்தில் பிரவீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஓசூர் நியூ ராயக்கோட்டை சேர்ந்த தபரீஷ் என்பவர் ஓசூரில் இருக்கும் மற்றொரு தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பிரவீனிடமிருந்து ஒரு லட்ச ரூபாய் பணத்தை வாங்கியுள்ளார்.

ஆனால் கூறியபடி தபரீஷ் வேலை வாங்கி கொடுக்கவில்லை. மேலும் பணத்தையும் தரவில்லை. இதுகுறித்து பிரவீன் ஓசூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தபரீஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.