தென் சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்ச்செல்வியை ஆதரித்து சீமான் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், நடக்க தெம்பு இருக்கும்போதே பொறுப்பை தாருங்கள், சக்கர நாற்காலியில் வரும்போது தராதீர்கள், கச்சத்தீவை மீட்போம் என்பவர்கள் அருணாச்சலப் பிரதேசத்தை மீட்போம் என்று ஏன் கூறவில்லை.

கச்சத்தீவு என் பாட்டன் சொத்து, கச்ச தீவை திருப்பிக் கொடுக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் கேட்பேன். அதை செய்யவில்லை என்றால் தமிழ்நாட்டை பிரித்து விடு என்று வலியுறுத்துவேன் என சீமான் பேசியுள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது.