சென்னை மாவட்டத்தில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை பரசுராமன் தெருவில் ஆட்டோ டிரைவரான சம்சுஷேக்(36) என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் சம்சுஷேக் முகப்பேரைச் சேர்ந்த ஜிலானி(35) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சம்சுஷேக்கின் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. வீட்டின் கதவு உள்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்ததால் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஜிலானி எரிந்த நிலையில் தூக்கில் தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரது உடலை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஜிலானியின் கணவரை கைது செய்தனர். ஜிலானி தற்கொலை செய்வதற்காக உடலில் தீ வைத்து கொளுத்தியதும், பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.