சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் டோல்கேட் பகுதியில் ராஜேஷ் பிரதர்ஸ் என்ற பெயரில் பருப்பு கம்பெனி செயல்பட்டு வருகிறது. கடந்த 10 வருடங்களாக கம்பெனியில் கணக்கு பார்த்து வந்த சரண்யா(32), பிரதீபா(36), திவ்யா ஆகிய பெண் ஊழியர்கள் சுமார் 2 1/2 கோடி ரூபாய் வரை பணத்தை கையாடல் செய்துள்ளனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் 3 பேரும் இணைந்து பணத்தை கையாடல் செய்தது உறுதியானது.

இதனால் சரண்யா, பிரதீபா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் திவ்யாவை கைது செய்யாமல் அவர் மீது வழக்கு பதிந்தனர். இதனையடுத்து 3 பேரின் வீடுகளிலும் போலீசார் நடத்திய சோதனையில் 27 1/2 லட்சம் ரூபாய் பணம், 197 பவுன் தங்க நகைகள், 67 லட்ச ரூபாய் வங்கி வைப்புத் தொகை, ஒரு கார், இரண்டு மோட்டார் சைக்கிள்கள், 6 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.