தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஜாகிரி பகுதியில் பழனியம்மாள்(75) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று காலை பழனியம்மாள் சேலம்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது பழனியம்மாள் பாம்பை பார்த்து அச்சத்தில் வேகமாக நடந்து சாலைக்கு சென்றுள்ளார். அதே சமயம் அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் பழனியம்மாள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

இந்த விபத்தில் பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழனியம்மாளின் உடலை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.