சென்னை சேர்ந்த லட்சுமணன் என்பவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் வேளச்சேரி ராமகிரி நகர் பகுதியில் இருக்கும் ஐந்து வீடுகளை நேரில் பார்வையிட்டு அதனை வாங்க முடிவு செய்தேன். அந்த ஐந்து வீடுகளுக்கும் 2.10 கோடி ரூபாய் என விலை பேசி முடிவு செய்யப்பட்டதால் அட்வான்ஸ் தொகையாக 71 லட்ச ரூபாயை கொடுத்தேன். அந்த வீடுகளுக்கான பட்டா ஆவணம் வேறு ஒருவர் பெயரில் இருந்தது. போலியான பட்டா ஆவணத்தை பயன்படுத்தி அந்த வீடுகளை விற்பனை செய்ய திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர்.

இதனால் 5 வீடுகளையும் பத்திரப்பதிவு செய்து கொடுக்காமல் காலம் தாழ்த்தினார். மேலும் என்னிடம் இருந்து வாங்கிய 71 லட்சம் ரூபாய் பணத்தையும் திரும்பி தராமல் மோசடி செய்துள்ளனர். எனவே சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மோசடியில் ஈடுபட்டதாக அதே பகுதியைச் சேர்ந்த பிரியா விஷா(38) அவரது கணவர் சாகுல் ஹமீது(58) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.