தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி சாலை விரிவாக்க பணி நடைபெற்று ஒரு வருடம் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது பேராவூரணி கடைவீதியான ஆவணம் சாலை, நீலகண்ட பிள்ளையார் கோவில் அருகே ஏற்கனவே இருந்த மின் கோபுரம் சாலை விரிவாக்க பணியின் காரணமாக அகற்றப்பட்டிருந்தது. முதன்மை சாலையில் நடுவே சென்டர் மீடியன் அமைத்து சாலை பணிகள் முடிவடைந்து ஒரு வருடம் ஆன பின்பும் இந்த உயர் மின் கோபுர விளக்கு அமைக்கப்படவில்லை.

இதனால் தெருவோர வியாபாரிகள், பெண்கள், பாதசாரிகள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் இரவு நேரங்களில் மிகவும் சிரமப்படுகின்றனர். அதிலும் இரவு நேரங்களில் சாலையை கடக்கும் போது வெளிச்சம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கோபுரம் மின்விளக்கு அமைக்கப்பட்டு இருந்த இடத்தில் உயர் கோபுரம் மின்விளக்குகளை அமைக்க வேண்டும். மேலும் முக்கிய சாலைகளில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.