இந்தியாவில் டிஜிட்டல் முறை மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஆதார் கார்டை பயன்படுத்தி பல மோசடிகள் நடைபெறுகின்றன. இப்படியான சூழலில் ஆதார் அட்டைதாரர்கள் ஆதார் பயோமெட்ரிக் விவரங்கள் அனைத்தையும் லாக் செய்து வைத்திருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் சமீபத்திய மொபைல் எண் உங்களது ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளது நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.

ஏதாவது மோசடி நடைபெறுவது போல சந்தேகம் வந்தால் உடனே அதிகாரியிடம் புகார் அளிக்கலாம். உங்களுடைய ஆதார் எண் மற்றும் ஓடிபி எண்களை எதற்காகவும் யாருடனும் பகிர்ந்து கொள்ள கூடாது. அதனைப் போலவே கடன் மற்றும் வேலை வாய்ப்பு தொடர்பாக உங்களுடைய ஆதார் எண்ணை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை குறைக்க வேண்டும். ஆதார் பற்றிய உங்களது தகவல்கள் மற்றும் புதுப்பிப்பிற்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை மட்டும் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.