உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில் ரஷ்யா உக்ரைன்  மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக ஜெலேன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள போக்ரோவ்ஸ்க் மீது ரஷ்ய ஏவுகணைகள் தாக்கியதில் குடியிருப்பு கட்டிடம் சேதமடைந்து ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் அந்த தாக்குதலில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி நடந்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த  தாக்குதலில் 19 போலீஸ் அதிகாரிகள் 5 மீட்பு பணியாளர்கள் உட்பட 31 பேர் காயமடைந்த நிலையில் ஒரு குழந்தையும் இதில் பாதிப்புக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.