அமெரிக்க நாட்டில் உள்ள விஸ்கான்சின் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 2016 ஆம் ஆண்டு ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் அன்னே என் நெல்சன் கோச். அந்த சமயத்தில் 67 வயதான நெல்சன் கோச் அதே பள்ளியில் பயின்று வந்த 14 வயது மாணவனை 25க்கும் மேற்பட்ட முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு அக்டோபர் மாதம் 27ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் அதுவரை நெல்சன் கோச் சிறையில் இருக்க வேண்டும் ஸ்கைல்ஸ் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால் மன்ரோ கவுண்டி சர்க்யூட் நீதிமன்றத்தின் நீதிபதி அவருக்கு தண்டனை விதிக்கப்படும் வரை விடுவிக்கப்பட்டு ஜிபிஎஸ் மானிட்டர் மூலமாக கண்காணிக்கப்படுவார் என தெரிவித்துள்ளார்.