சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு காணொளி, பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு சக்கர வாகனத்தில் வந்த பெண் ஒருவர், குப்பையை உரிய இடத்தில் கொட்டாமல், மற்றவர்கள் வீட்டின் முன்போ அல்லது பொதுச் சாலையிலோ அலட்சியமாக வீசிவிட்டுச் செல்ல முயல்கிறார்.
Education Without Responsibility Is a Lie
Education means nothing when people clean their own homes but throw garbage on the roads or in front of someone else’s house. Cleanliness is not the responsibility of the municipality alone; it is equally the duty of every citizen to… pic.twitter.com/vperXWSHeU
— Karnataka Portfolio (@karnatakaportf) January 4, 2026
அங்கிருந்த சமூக ஆர்வலர்கள் அவரைத் தடுத்து நிறுத்தி, குப்பையை எடுக்குமாறு தட்டிக் கேட்டும், அவர் சிறிதும் குற்றவுணர்வின்றி அந்தக் குப்பையைச் சாலையிலேயே தள்ளிவிட்டுவிட்டுச் செல்கிறார். “சுத்தம் என்பது நகராட்சியின் கடமை மட்டுமல்ல, ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பு” என்பதை மறந்து செயல்பட்ட அந்தப் பெண்ணின் அநாகரீகமான செயல் பார்ப்போரை முகம் சுளிக்க வைத்துள்ளது.
