இரும்புக் குவியலுக்குப் போக வேண்டிய நிலையில் இருக்கும் ஒரு கார், சாலையில் எந்தவொரு தடங்கலும் இல்லாமல் மிகவும் சீராகச் செல்லும் அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று இன்ஸ்டாகிராமில் வெளியாகி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

‘its_prdiip_005’ என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோவை, சாலையில் சென்றுகொண்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தனது மொபைலில் பதிவு செய்துள்ளார். காரின் வெளித்தோற்றம் மற்றும் உடல் அமைப்பு முழுவதும் முற்றிலும் சிதிலமடைந்து, பார்ப்பதற்கே மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

முதல் பார்வையில் இந்த வாகனம் இனி ஓடுவதற்குத் தகுதியே இல்லாதது போல் தோன்றினாலும், அது சாலையில் அசால்ட்டாக முன்னோக்கிச் செல்வது மக்களைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்தக் காணொளியைப் பார்த்த சமூக வலைதளப் பயனர்கள் பலரும், காரின் நிலையைப் பார்த்த பிறகும் அது எப்படி இன்னும் இயங்குகிறது என்று நம்ப முடியாமல் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

சிலர் இதனை இந்தியர்களின் திறமையான ‘ஜுகாட்’ தொழில்நுட்பத்திற்குச் சிறந்த உதாரணம் என்று குறிப்பிட்டுள்ள வேளையில், மற்ற சிலர் அந்த வாகனம் காரின் இன்ஜினைக் காட்டிலும் ஓட்டுநரின் மன உறுதியால் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கிறது என்று வேடிக்கையாகக் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by 𓆩𓆪 (@its_prdiip_005)

“>

குறிப்பாக, இவ்வளவு மோசமான நிலையில் இருக்கும் ஒரு வாகனத்தை விபத்து ஏதும் ஏற்படாமல் சாலையில் கட்டுப்பாட்டுடன் இயக்கும் அந்த ஓட்டுநரின் அசாத்திய திறமையையும் தன்னம்பிக்கையையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.