நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. நகரங்கள் மற்றும் கிராமங்கள் என பட்டி தொட்டி எங்கும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் கிருஷ்ணகிரியில் அரங்கேறிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

அதாவது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் அந்த பகுதியில் வசிக்கும் இந்துக்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று விநாயகர் சிலை மற்றும் பூஜை பொருட்களை வழங்கியுள்ளனர். இஸ்லாமியர்களின் இந்த செயல் அந்த பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது