இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இருக்காது. பொதுவாகவே குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்கிறார்கள் என்றால் அங்கு காமெடியும் ரகளையும் நடந்து கொண்டுதான் இருக்கும். அதிலும் பள்ளிக்கூடம் ஆரம்பித்து விட்டால் பெற்றோர்களுக்கு பெரும் பரபரப்பான சூழல்தான்.

குறிப்பாக தாய்மார்களுக்கு தலைக்கு மேல் வேலையை வைத்துக் கொண்டு பரபரப்பாகவே இருக்கும் சூழல் நிலவும். இங்கு குழந்தை ஒன்று ஆங்கிலம் எழுதுவதற்கு பழகிக் கொண்டிருந்த நிலையில் அவரை நம்ம கற்றுக் கொடுத்துள்ளார். அந்த குழந்தை காதில் வாங்கிக் கொள்ளாமல் தவறாக எழுதிய நிலையில் தாய் இறுதியாக குழந்தையின் எழுத்தை பார்த்து இட்லி வரைந்து பக்கத்துல சட்னி போட்டு என்று கூறியதும் குழந்தை பயங்கரமாக தனது பார்வையை கொடுத்துள்ளது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் சிரிக்க வைத்துள்ளது.