சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது என்றால், அது ஏதோ ஒரு விசித்திரமான அல்லது சுவாரசியமான பின்னணியைக் கொண்டிருக்கும். அந்த வகையில், தற்போது இணையவாசிகளிடையே பெரும் விவாதத்தையும் சிரிப்பலையையும் ஏற்படுத்தியிருக்கிறது ஒரு மனைவியின் புகார் வீடியோ. தன் கணவர் செய்யும் ஒரு காரியத்தால் தன்னால் வீட்டில் ஏசியைப் பயன்படுத்தவே முடியவில்லையென அந்தப் பெண் கதறியுள்ளார். அதாவது தினமும் அலுவலகத்திற்குச் செல்லும்போது, வீட்டில் இருக்கும் ஏசி ரிமோட்டைத் தனது பையிலேயே போட்டு கணவன் எடுத்துக்கொண்டு சென்றுவிடுகிறாராம்.
வீட்டின் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காகவே கணவர் இந்த “அதிரடி” நடவடிக்கையை எடுத்திருப்பதாக மனைவி தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இந்த வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே வைரலாகி, இணையத்தில் காரசாரமான விவாதப் பொருளாக மாறியுள்ளது. “இதெல்லாம் கொஞ்சம் ஓவர்,” என்று சிலர் கணவரை விமர்சிக்க, “கோடைகாலத்தில் கண்டபடி ஏசி போட்டால் கரண்ட் பில் விண்னைத் தொடும், கணவர் செய்தது நியாயம்தான்” என பட்ஜெட் குடும்பஸ்தர்கள் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.
Husbands treat their wives in such a inhumane manner, yet they are surprised that cases of infidelity and divorce have risen these days.
The wife alleges that her husband takes the AC remote to the office with him so that she cannot use the AC during the day, all in an effort to… pic.twitter.com/TiazjZg1V6
— Magadh Updates (@magadh_updates) July 19, 2026
இதற்கிடையே, நெட்டிசன்கள் சிலர் இந்தச் சம்பவத்தில் உள்ள “தொழில்நுட்ப” ரகசியத்தைச் சுட்டிக்காட்டி மனைவியை கலாய்த்து வருகின்றனர். பெரும்பான்மையான விண்டோ ஏசிகளில் நேரடியாகவே இயக்குவதற்கான பட்டன்கள் இருக்கும் என்றும், ரிமோட் இல்லாவிட்டாலும் ஸ்மார்ட்போன் செயலிகள் மூலம் ஏசியைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் ஆலோசனைகளை அள்ளி வீசி வருகின்றனர். இதனால், கணவர் தன் ரிமோட்டை ஏதோ முக்கிய அலுவலக ஆவணம் போல தினமும் தூக்கிச் செல்வது இணையத்தில் பெரும் நகைச்சுவையாக மாறியுள்ளது.
வேடிக்கையைத் தாண்டி, இந்தச் சம்பவம் தம்பதிகளுக்கு இடையேயான நிதி மேலாண்மை மற்றும் புரிதலின் முக்கியத்துவத்தையும் வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது. குடும்பச் செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்றாலும், இதுபோன்ற தனிப்பட்ட குடும்ப விவகாரங்களைப் பொதுவெளியில் வீடியோவாகப் பதிவிடுவதைத் தவிர்க்கலாம் என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், இந்த வீடியோ தற்போது இணையத்தில் தொடர்ந்து பகிரப்பட்டு, காரசார விவாதங்களையும் சிரிப்பலைகளையும் ஏற்படுத்தி வருகிறது.
