சென்னையில் உள்ள தனியார் மகப்பேறு மருத்துவமனையான சென்னை பெர்டிலிட்டி சென்டர் மற்றும் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் மீது வெளிநாட்டுத் தம்பதி அளித்துள்ள பகிரங்கக் குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. வங்கதேசத்தைச் சேர்ந்த தம்பதியிடம் ஆண் குழந்தை பெற்றுத் தருவதாகக் கூறி, போலி வாக்குறுதிகள் அளித்து முறைகேடான முறையில் 97 லட்சத்திற்கும் அதிகமான பணம் சட்டவிரோதமாகப் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தம்பதியிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு முறையான சேவையாற்றாமல், அவர்களது பாஸ்போர்ட்டை சட்டவிரோதமாகப் பறிமுதல் செய்து தொந்தரவு அளித்து வருவதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகளுக்கு எதிராக தம்பதி தட்டிக் கேட்டபோது, ‘ஏ+’ ரவுடி என வர்ணிக்கப்படும் கொரட்டூர் விநாயகம் மூலம் அவர்களுக்குத் தொடர் மிரட்டல்களும் அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அரசியல் மற்றும் அதிகார மையங்களின் செல்வாக்கைக் கொண்டு இந்த விவகாரத்தை மறைக்க முயல்வதாகவும், சம்பந்தப்பட்ட மருத்துவமனை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ வி.எம். தாமசுக்கு சொந்தமானது என்றும் தகவல்கள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அனைத்து அரசியல் அழுத்தங்களையும் மீறி, தனக்கு நீதி வேண்டி அந்த வங்கதேசத் தம்பதி தற்போது தீவிரமான சட்டப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

“>

 

எனவே, இந்த மோசடி மற்றும் மிரட்டல் விவகாரம் குறித்துக் காவல்துறை உரிய மற்றும் முறையான கிரிமினல் விசாரணை நடத்த வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட கொரட்டூர் விநாயகம் மற்றும் எம்.எல்.ஏ தாமஸ் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்துத் தங்களுக்குத் தகுந்த தண்டனை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்குக் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.