தமிழகத்தில் மத்திய மற்றும் மாநில அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்படுவதால் மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏகப்பட்ட மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி சார்பாக போட்டி தேர்வுக்கு தயாராகி வரும் தேர்தல்கள் பயிற்சிக்காக நோக்கம் என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த செயலி மூலம் டிஎன்பிஎஸ்சி , யுபிஎஸ்சி, எஸ் எஸ் சி வங்கி பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட தேர்வாணையங்கள் நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. தேர்வர்கள் இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.