தமிழகத்தில் வருகின்ற மார்ச் 13ஆம் தேதி ஐந்து மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. வருகின்ற மார்ச் 4ஆம் தேதி மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி மற்றும் சிவகங்கையாகிய ஐந்து மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்வதால் அன்றைய தினம் (சனிக்கிழமை) திங்கட்கிழமை அட்டவணைப்படி ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பள்ளிகள் செயல்படும். அதற்கு பதிலாக மார்ச் 13ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.