இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு கடந்த 2004 ஆம் ஆண்டு பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. அப்போதிலிருந்து தற்போது வரை மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

தற்போது பல மாநிலங்களிலும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது பஞ்சாப் மாநில அரசு பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 2004 ஆம் ஆண்டுக்கு முன்பு அரசு பணியில் சேர்ந்த அனைத்து ஊழியர்களும் பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை பெற முடியும் எனவும் இந்த பழைய ஓய்வூதிய திட்டத்திற்கான பலன்களை அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அடுத்த நான்கு மாதங்களில் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.