சென்னையில் இருந்து குஜராத் செல்லும் வாராந்திர ரயில்களில் ஒரு மாதத்திற்கு கூடுதலாக தலா ஒரு படுக்கை வசதி கொண்ட பெட்டி இணைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து சென்னை சென்றதற்கு சனிக்கிழமை தோறும் விரைவு ரயில், திங்கட்கிழமை தோறும் ஹம்சாபர் விரைவு வரையிலும் இயக்கப்பட்டு வருகின்றது. மறு மார்க்கமாக இந்த ரயில்கள் சென்னை சென்ட்ரலில் இருந்து வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படுகிறது.

அதேசமயம் குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் இருந்து சென்ட்ரலுக்கு புதன்கிழமை தோறும் மறு மார்க்கமாக சென்ட்ரலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களில் ஒரு மாதத்திற்கு கூடுதலாக தலா ஒரு படுக்கை வசதி கொண்ட பெட்டி இணைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.