இந்திய ரிசர்வ் வங்கி பேடிஎம் வங்கி செயல்பாடுகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளது. வருகின்ற பிப்ரவரி 29ஆம் தேதி உடன் சேவையை நிறுத்த உத்தரவிட்டு உள்ள நிலையில் தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டதால் ரிசர்வ் வங்கி தலையை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. Paytm payment வங்கி கணக்கு அல்லது wallet இல் கிரெடிட்டுகள் அல்லது டாப் அப்களை தடை செய்யும் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு அதாவது மார்ச் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவித்தது. இந்தச் செய்தி அனைவரையும் கதி கலங்க செய்தது. இது தொடர்பாக பேடிஎம் நிறுவனம் முறையான விளக்கம் அளித்துள்ளது.

அதன்படி பேடிஎம் பேமெண்ட் வங்கி கணக்குகள், பேடிஎம் வாலெட், Paytm பாஸ்டேக் மற்றும் மொபிலிட்டி கார்டுகள் ஆகியவற்றில் இருக்கும் பேலன்ஸ்களை மட்டும் பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகும் யூஸர்கள் பயன்படுத்த முடியும். உங்களுடைய சேமிப்பு கணக்கில் இருந்து அல்லது நடப்பு கணக்கிலிருந்து பணத்தை பயன்படுத்தவும் பரிவர்த்தனை செய்வதற்கும் எந்த ஒரு தடையும் கிடையாது. பேடிஎம் பயன்படுத்தக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இருக்காது எனவும் அவர்கள் வழக்கமாக UPI பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.