பாசாங்குகாக கூட பத்து வார்த்தை பாஜகவை கண்டிக்க நெஞ்சூரம் இல்லாத பழனிசாமி ஊரை ஏமாற்றப்படும் கபட நாடகத்தை யாரும் நம்பவில்லை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர், பழனிச்சாமி அவர்கள் கபட நாடகத்துக்கான ஸ்கிரிப்ட் தயாராகும் இடமே பாஜக தான்.

பத்தாண்டுகள் பாஜகவின் பாதம் தாங்கி, தலைமேல் தூக்கி சுமந்து தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்து, பதவி சுகம் அனுபவித்து விட்டு திடீர் ஞானோதயம் வந்தது போல பேசினால் தமிழர்கள் நம்பி விடுவார்களா? அதிமுகவுக்கு மோடி தான் டாடி என்பது எல்லோருக்குமே தெரியும் என தெரிவித்துள்ளார்.