தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் அதிமுக போட்ட பிச்சையால் பாஜகவில் நான்கு எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள் என முன்னாள் அமைச்சரும் எம்பியுமான சி.வி. சண்முகம் விமர்சித்துள்ளார்.

விழுப்புரத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் யாத்திரைக்கு ஒரு கடை விடாமல் வசூலித்தார்கள். மீண்டும் மோடி வேண்டாம் நமக்கு. மீண்டும் மோடி வந்துவிட்டால் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து என தெரிவித்துள்ளார்.