தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது, மோடியிடம் பல்லைக் காட்டிக்கொண்டு எடப்பாடி பழனிச்சாமி சிரித்துக் கொண்டுள்ளார் என உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார்.

அதற்கு பதில் அளிக்கும் விதமாக எடப்பாடி பழனிச்சாமி நேற்று தூத்துக்குடி பிரசார கூட்டத்தில், யார் பல்லை காட்டுகிறார்கள் நீங்கள் தான் பாஜகவுடன் கள்ள கூட்டணி வைத்துள்ளீர்கள் என கூறி இருந்தார். மேலும் இந்த பழனிச்சாமி எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்க மாட்டேன் நான் வாயைத் திறந்தால் என்ன ஆகும் என்று தெரியாது என கூறியுள்ளார்.